🛕 Mahalingeswarar

மகாலிங்கேஸ்வரர்

📜 About this temple

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பிரதேசத்தை ஆண்ட பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த ஊத்துக்காடு புகழ்பெற்ற ஒரு கோட்டமாக பெரும் சிறப்புடன் விளங்கி வந்தது. தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளைப் பதினெட்டுக் கோட்டங்களாகப் பிரித்து ஆட்சி செலுத்தினார்கள். அதில் ஊத்துக்காடும் ஒன்று என்கிறது கல்வெட்டுத் தகவல். ஒரு சமயம் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் இங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனின் கையில் ஏதோ வழுவழுப்பான ஒன்று தென்பட்டது. உடனே தன் கையிலிருந்த குச்சியைக் கொண்டு தோண்டுகையில் ஒரு அழகான பாணலிங்கம் இருப்பதைக் கண்டான். இதை கவனித்த மற்ற சிறுவர்கள் அனைவரும் இது நம் முன்னோர்கள் வழிபட்ட கோயில் என்பதை உணர்ந்து நமசிவாய என கோஷமிட்டனர். பின் ஊருக்குள் சென்று நடந்ததை அனைத்தையும் ஊர் பெரியவர்களிடம் கூறி அவர்களை அழைத்து வந்தனர். பின் ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தினர்.அழகான மகா மண்டபம், பிரகாரம், ஓரிரு கல்வெட்டுகள், ஈசனின் லிங்கத் திருமேனி, நந்தி, பைரவர் சிலைகளை கண்டெடுத்தார்கள். தீபம் ஏற்றி சிவனுக்கு வஸ்திரம் அணிவித்தார்கள். இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை ஆகி இருந்த சிவலிங்கத் திருமேனியின் நாமம் என்ன என்பது எவருக்கும் தெரியாததால் அங்குள்ள பெரியவரிடம் நடந்ததைக் கூறினார்கள். இத்தனை நாள் மண்ணுக்குள் புதைந்து இருந்த சிவனை மகாலிங்கேஸ்வரர் எனவும், அம்மனை பெரியநாயகி எனவும் அழைக்குமாறு கூறியுள்ளார். அதன்படியே திருநாமம் வைத்து திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்குள்ள சிவபெருமான் பாணலிங்க வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).