📜 About this temple
ராம அவதாரத்தில் ராமபிரானுக்கு ராவணனுக்கும் நடைபெற்ற போரில் ஒரு கட்டத்தில் ராமனின் தம்பி லட்சுமணன் மூர்சையாகிவிடுகிறான். அந்த பரம்பொருளான ராமன் நினைத்திருந்தால் லட்சுமணனை ஒரு நொடியில் எழுப்பிவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு மனமில்லை. அருகிலிருந்த விபீடணன் ராமனுக்கு ஆறுதல் தந்ததோடு, சஞ்சீவிபர்வதத்திலிருக்கும் மூலிகையை எடுத்து வந்து லட்சுமணனை முகத்தில் படவைத்தால் மூர்ச்சையிலிருந்து எழ இயலும் என்று கூறுகிறான். இச்செயலைக் செய்ய சர்வமும் தானேயென்று இருக்கும் மகாபராக்கிரமனான ஆஞ்சநேயர் ஒருவரால்தான் இயலும் என்பதை உணர்ந்த ராமன், அனுமனிடம் வந்து உதவி கேட்கிறார். என்றும் தன் உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் அந்த ஸ்ரீராமனே தன்னிடம் உதவி கேட்டால் மறுப்பானா? உடனே சஞ்சீவி பர்வதத்தை அடைந்து மூலிகையைத் தேடுகிறான், ஆஞ்சநேயர். அவனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சஞ்சீவி பர்வதத்தையே தனது கைகளில் தூக்கி நிறுத்தி பறந்து வந்துவிடுகிறான். ஸ்ரீராமன் முகத்தில் அனுமனைக் கண்டதும் பரவசம் மேலிடுகிறது. விபீடணம் அடையாளம் காட்ட, சஞ்சீவி மூலிகையை லட்சுமணனின் முகத்தில் வைக்க, அவரும் மூர்ச்சையிலிருந்து விடுபட்டு எழுகிறான். தாங்க முடியாத சந்தோஷத்தில் செயற்கரிய செயலை செய்து முடித்த ஆஞ்சநேயரை ஆரத் தழுவிக் கொள்கிறார் ராமசந்திர பிரபு. அப்போது அனுமனின் கைகளை அவர் கவனிக்க, மலையை சுமந்து வந்ததால் உள்ளங்கையில் புண்கள் ஏற்பட்டு ரணமாகியிருந்தது. திடுக்குற்ற ராமர், தாமரை மலரைக் கொண்டு அனுமனின் கையை மெல்ல வருடி விடுகிறார். ஆஞ்சநேயனுக்கோ, தனது இதயத்துள் வைத்து பூஜிக்கும் ராமச்சந்திர பிரபுவே தனக்கு சேவை செய்ததில் சந்தோஷம் பிடிபடவில்லை. துள்ளிக் குதிக்கிறான். நர்த்தனமாடுகிறான். ஆம்! இப்படி நர்த்தனக் கோலத்தில் அனுமன் காட்சிதரும் புனித்தலம், மலை வையாவூர். இங்கு வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கி சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார்.
கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார். தாமரைத் தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தில் இவரைக் காண்பது சிறப்பு.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).