📜 About this temple
ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா, சிவனைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். படிப்படியாக அதுவே தலைக்கனமாக மாறிவிட, தன்னைவிட உயர்ந்தவர் எந்த உலகிலும் எவருமில்லை என்ற கர்வத்தோடு, தான்தோன்றித் தனமாகத் திரிந்தார். அவரது அகந்தை அளவுமீறிப் போகவே ஒரு கட்டத்தில் சினந்த சிவபெருமான், பிரம்மாவின் தலைகளுள் ஒன்றைக் கொய்தார். அதோடு அவருடைய படைப்பாற்றலையும் பறித்தார். தலைபோனதும் தலைக்கனமும் போய்விட, தன் தவறை உணர்ந்தார், பிரம்மா. மன்னிக்கும்படி வேண்டி, சிவபெருமான் அருள்பாலிக்கும் பல தலங்களுக்குச் சென்று ஆராதித்தார். இவ்வாறு பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த வகையில் நான்முகன் சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதுவே இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படக் காரணமானது.
பாலமுருகன் தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய தலம் இது என்பதால், பாலமுருகனுக்கு மரியாதை தரும் வகையில், தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை இவ்வூர் மக்கள். அந்த சமயத்தில் தொட்டிலைக் கட்டுவது கூட இல்லை.
Source: Dinamalar Temple Portal.
📝 Visitor Tips
- Dress modestly (cover shoulders and knees).
- Footwear must be removed outside the main complex.
- Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
- Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
- Carry water and modest cash for prasadam, donations, or local transport.
🔗 Explore Related
📚 Sources
Composited from OpenStreetMap (ODbL).