🛕 Arulmigu Sundhareswarar Temple

அருள்மிகு சுந்தரேஷ்வரசுவாமி திருக்கோயில், நீர்மூளை - 614711
🔱 Sundhareswarar

📜 About this temple

ஒரு சமயம் திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப் பார்க்க நினைத்த சிவபெருமான், இணையில்லாத பேரழகு வடிவானவன் நான்தான் என்கிறார். உமாதேவியோ, இல்லையில்லை. நானே அழகில் சிறந்தவள் என்று பதில் கூறுகிறார். யார் அழகு? என்ற விவாதம் தொடர ஒரு கட்டத்தில் சிவபெருமான் கோபமாகி மறைந்து போகிறார். பெருமானைக் காணாது தவித்த உமாதேவி, அய்யோ, தவறு செய்து விட்டோமே! என்று வருந்துகிறாள். எம்பெருமானை எப்படி வரவழைக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்த உமாதேவி, உடனே அழகிய மயில் வடிவம் எடுத்து, கண்ணுவாச்சிபுரம் என்ற திருத்தலத்திற்குச் சென்று சிவனை துதித்திருக்கிறாள். அப்போது அழகிய கோலத்தில் சுந்தரமகாலிங்கமாக காட்சியளித்திருக்கிறார், சிவபெருமான். சிவனின் சுந்தரவடிவம் கண்ட உமாதேவி உச்சிக்குச் சென்று மயில்வடிவாக மாறி தனது தோகையை விரித்து ஆனந்த நடனம் ஆடினாள். அது முதல் இந்த தலம் திருமயிலாடி எனப் பெயர் பெற்றிருக்கிறது. கண்ணுவ மகரிஷி யோகசாதனை செய்த தலம் என்பதால் இந்த ஊர் கண்ணுவாச்சிபுரம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.

இறைவி பிருகன் நாயகிக்கு இரண்டு சன்னிதிகள் அமைந்துள்ளது சிறப்பு. இங்குள்ள முருகனின் உற்சவ மூர்த்தமும் சிறப்பானவைதான். தேவ அசுரயுத்தம் முடிந்து சூரனாகிய மயில்மீது அமர்ந்தபடி குமரக்கடவுள் திருமயிலாடி தலத்தில் எழுந்தருளுகிறார்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).