🛕 Arulmigu Rajendresolieswarar Temple

அருள்மிகு இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில், அறந்தாங்கி நகர் மற்றும் வட்டம் - 614616
🔱 Rajendresolieswarar

📜 About this temple

அசுரர்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, தேவர்கள் சிவபெருமானை தரிசிக்க வந்தனர். யோக நிலையில் இருந்த அவரை எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் மீது மலர்க்கணைகளை தொடுக்கும் படி மன்மதனை வேண்டினர். இட்ட பணியை செய்யாவிட்டால் தன்னை சபித்துவிடுவர் என்று அஞ்சிய மன்மதனும் சிவபெருமான் மீது மலர் அம்பை தொடுத்தான். கோபத்துடன் நெற்றிக்கண்ணை திறந்த சிவன், மன்மதனை சாம்பலாக்கினார். காமத்திற்கு அதிபதியான மன்மதனை வெற்றி கொண்டதால், இங்குள்ள சுவாமிக்கு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர் அம்பாள் சவுந்தரநாயகியம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநதிபுரம் என்பர். பாண்டியர் ஆட்சியில் காருண்யபாண்டியன் கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளான். தற்போது நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது. நகரத்தாரின் ஒன்பது முக்கிய கோயில்களில் இதுவும் சிறப்பானதாகும்.

இத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).