🛕 Arulmigu Vallapa Ayyanar Temple

அருள்மிகு வல்லபஅய்யனார் திருக்கோயில், Peyaal - 622102
🔱 Vallapa Ayyanar

📜 About this temple

இங்குதான் ரகுநாத சேதுபதி இந்திரனை யாகம் வளர்த்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. அவர், வழிபட்டு வந்த ஊரணிக்கரையில் தான் வல்லபை ஐயப்பன் திருக்கோயில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. சேதுபதி மன்னர் யாகம் வளர்த்து ஆன்மீகத்தை காத்த இந்த ரகுநாதபுரத்தில் கோயிலின் தோற்றம் சபரிமலை சன்னிதானத்தை போன்றே அமைக்கப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இக்கோயில் அமைவிடத்தில் சிறிய விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்துள்ளன. ராமநாதபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் சந்தக்கடை தெருவில் மிகப்பழமையான வல்லபை விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. முருகன் வதம் செய்த சூரனின் தங்கையின் பெயர் வல்லபை என்பதாகும். சூரனின் வதத்திற்குப் பிறகு முருகனை அழிக்க வல்லபை சிவனிடம் கணக்கில் அடங்கா அசுரர்களைப் பெறும் வரத்தை வாங்கியிருந்தாள். வல்லபையின் கோபத்தை விநாயகர் தடுத்து நிறுத்தி அவருக்கு அருள்பாலித்தார். இதற்கு பிறகு அவருக்கு வல்லபை விநாயகர் எனப்பெயர் ஏற்பட்டது. அவரது திருப்பெயராலே ரெகுநாதபுரத்தில் உள்ள விநாயகரும் வல்லபை விநாயகர் என அழைக்கப்படுகிறார். இங்குதான் ஐயப்பன் ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டு 2005ம் ஆண்டு சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. வல்லபை விநாயகரின் பெயராலே இங்குள்ள ஐயப்பனும் வல்லபை ஐயப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படுவதும் தலத்தின் சிறப்பு.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).