🛕 Arulmigu Kailasanathar And Varadharaja Perumal Temple

அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வரதராஜபெருமாள் திருக்கோயில், செல்லூர் - 613705
🔱 Kailasanathar and Varadharaja Perumal

📜 About this temple

திருத்துறைப்பூண்டி என்ற திவ்யசேத்ரம் ஒரு காலத்தில் திருத்தருப்பூண்டி என அழைக்கப்பட்டது. வில்வமரங்கள் சூழ்ந்த காடாக அமைந்தது இத்தலம். இங்கு, திருமால் குடி கொண்டுள்ளார். அவரது திருநாமம் அபிஷ்ட வரதராஜப் பெருமாள். வரதராஜப்பெருமாள் கோயில் என்பதை விட, அவரது தாசனாய் இங்கு கொலு வீற்றிருக்கும் 16 அடி உயர ஆஞ்சநேயர் தான் பிரபலமாகி விட்டார். அனுமான் கோயில் என்றால் எல்லாருக்கும் பரிச்சயமாக உள்ளது."அபிஷ்டம்' என்ற சொல்லுக்கு "கோரிக்கை' என்று பொருள். இப்பெருமாளிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். இப்பகுதியை ஆண்ட வீரசோழன் என்ற மன்னன், எதிரிநாட்டினர் தந்த துன்பம் கருதி, அவர்களை போரிட்டு வெல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தான். பெருமாளின் நல்லாசியால் வெற்றி பெற்றான். நியாயமான கோரிக்கை வைத்தால், இவர் நிறைவேற்றி தருவது உறுதி என்ற கருத்தில் "அபிஷ்ட வரதராஜப் பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. இவரது தொண்டராக விளங்கும் ஆஞ்சநேயரை "வைராக்கிய ஆஞ்சநேயர்' என்கின்றனர்.

இது பெருமாள் கோயில் என்றாலும், அவரது தாசனாய் இங்கு கொலுவீற்றிருக்கும் 16 அடி உயர ஆஞ்சநேயர் தான் பிரபலம்.

Source: Dinamalar Temple Portal.

📝 Visitor Tips

  • Dress modestly (cover shoulders and knees).
  • Footwear must be removed outside the main complex.
  • Best time to visit: early morning or evening to avoid the day-time heat.
  • Photography is usually allowed in outer premises; ask before photographing the sanctum.
  • Carry water and modest cash for prasadam, donations, or local transport.

📚 Sources

Composited from OpenStreetMap (ODbL).